ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் இரவு நேர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என கேரள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு:

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது கேரள மாநிலத்தில் தான். இதனால் அம்மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களும் கேரள மாடலை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 2வது அலையில் விவகாரம் தலைகீழாக மாறியது. கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பினராயி விஜயன் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்? கொரோனா பரவல் எதிரொலி!

ஆனால் அமைச்சரவையில் முக்கிய மாற்றமாக சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் புதிய நபர் நியமனம் செய்யப்பட்டார். முதல் கொரோனா அலையை சிறப்பாக கையாண்ட அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பக்ரீத், ஓணம் என பண்டிகை காலங்களில் ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்டது. இதனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. அம்மாநிலத்தில் தற்போது தினசரி 30 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் உள்ளது.

Tokyo 2020 Paralympic – இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெள்ளி வென்றார் பவினா படேல்!

இதனால் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு கேரள தலைமை செயலரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அறிவுறுத்தினர். அதுமட்டுமின்றி கடந்த 2 வாரங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்த வார விடுதி ஊரடங்கும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினசரி இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!