Tokyo 2020 Paralympic – இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெள்ளி வென்றார் பவினா படேல்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டிகள்:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு நடப்பு ஆண்டில் நடைபெற்று வருகிறது. இம்முறை இந்தியாவிற்கு சிறந்த ஒலிம்பிக் சீசனாக அமைந்துள்ளது. தடகள வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்தார். இதற்கு அடுத்தபடியாக பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் இப்போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
IND vs ENG 3வது டெஸ்ட் – இங்கிலாந்து அணி அபார வெற்றி!!
இதிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை புரிவர் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதியானது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யிங் சூவை எதிர்த்து பவினா படேல் களம் கண்டார்.
SBI வங்கி ATM கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார். இதில் தோல்வி அடைந்த பவினா படேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் டேபிள் டென்னிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் பவினா படேல் தனதாக்கி உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.