தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!

0
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் கவனத்திற்கு - 'இது' கட்டாயம்!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் கவனத்திற்கு - 'இது' கட்டாயம்!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!

தமிழகத்தில் ஆசிரியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. எனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டன. தமிழகத்திலும் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

Tokyo 2020 Paralympic – இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெள்ளி வென்றார் பவினா படேல்!

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் என அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பேராசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

செப்.1 முதல் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. ஆனால் உடல் நல சூழலால் சில ஆசிரியர்களால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்ட அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் அதற்கான உரிய மருத்துவ சான்றிதழ் உடல் பள்ளிக்கு நேரில் வருகை புரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!