நாடு முழுவதும் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை நெருங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேர கணக்கின் படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவை,
ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று கொரோனாவால் புதிதாக 1,68,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 904 பேர் இறந்துள்ளனர். தற்போது வரை நாட்டில் மொத்தமாக 1,70,179 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த போதிலும் நேற்று ஒரே நாளில் 75,086 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அனுமதி!!
இதன்படி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,01,009 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் விகிதம் 89.86% ஆக உயர்ந்துள்ளது, அதே போல உயிரிழந்தோர் விகிதம் 1.26%, சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.88% ஆக அதிகரித்துள்ளது.