இந்தியாவில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ஆர்பிஐ அறிவிப்பு!
இந்தியாவில் சில மாநிலங்களில் அடுத்த வாரம் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கி விடுமுறை
இந்தியாவில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றனர். அந்த வகையில், வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன் படி, தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி அடுத்த வாரம் சில மாநிலங்களில் வங்கிகள் 5 நாட்களுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 26, வெள்ளிக்கிழமை குடியரசு தின விடுமுறை ஆகும்.
திங்கட்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!!
அதனை தொடர்ந்து, ஜனவரி 27 நான்காவது சனிக்கிழமை விடுமுறை ஆகும். பின் ஜனவரி 28 ஞாயிறு விடுமுறை ஆகும். மேலும், உத்திர பிரதேச மாநிலத்தில் ஹஸ்ரத் அலியின் பிறந்தநாளையொட்டி, ஜனவரி 25ம் தேதி அங்கு விடுமுறை ஆகும். எனவே, அந்த மாநிலத்தில் வங்கிகள் 5 நாட்கள் மூடப்படும். மேலும், ஜனவரி 22 அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருப்பதால் அன்றைய தினமும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். மேலும் பாட்டு மற்றும் நடனம் காரணமாக மணிப்பூரில் ஜனவரி 23 ஆம் தேதி வங்கி விடுமுறை ஆகும்.