டிச.29 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
டிச.29 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - மருத்துவர்கள் எச்சரிக்கை!
டிச.29 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - மருத்துவர்கள் எச்சரிக்கை!
டிச.29 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

அரசு மருத்துவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தம்:

சண்டிகரில் அரசு சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றி வரும் மருத்துவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு தங்களது கோரிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ள தவறினால் டிசம்பர் 29ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் மத்திய அரசின் வழியில் ஹரியானா அரசு மருத்துவர்களுக்கு ஏ சி பி ஐ வேண்டியும், மருத்துவ நிபுணர்கள், சிறப்பு பணியாளர்கள், முதுகலை செய்ய விரும்பும் மருத்துவ மாணவர்களுக்கான ஜாமீன் தொகையை குறைக்க வேண்டும் என்றும், மாநிலத்தில் எஸ்எம்ஓ க்களை நேரடியாக நியமனம் செய்வதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6,000 நிவாரணத்தொகை – டிச. 16 முதல் டோக்கன் விநியோகம்!

ஹரியானாவின் அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பான ஹரியானா சிவில் மெடிக்கல் சர்வீஸ் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிசம்பர் 27ம் தேதி அன்று ஒரு நாள் முழு வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும், அந்த நேரத்தில் வெளி நோயாளிகள் உட்பட அனைத்து சேவைகளையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அரசு முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!