முக்கிய போட்டியில் இந்தியா.. மழையால் ஆட்டம் தடையா? முழு விவரம் இதோ.!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2 வது T20 போட்டி கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த மைதானம், பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளின் அதிரடியான பேட்டிங்கை காணலாம். மேலும், ஒரு அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்கு மேல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வானிலை நிலவரமும் கைகொடுக்க கூடும். அதாவது, கடந்த சில தினங்களாக கிரீன்ஃபீல்ட் பகுதியில் மழை பெய்து வந்தது.
IND vs AUS டி20 போட்டி: வெற்றியை தட்டி தூக்கிய இந்தியா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆனால், நாளை மறுநாள் வானம் மேகமூட்டத்துடன் இருக்குமே தவிர 26 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் 64% ஈரப்பதத்துடன் மைதானம் இருக்கும். இதனால், மழைக்கு 10% மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதன் விளைவால், இந்த போட்டிக்கு வானிலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.