ஆவின் பால் பாக்கெட்டின் விலை மீண்டும் அதிகரிப்பு – பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் பால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆவின் பால்:
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களை காட்டிலும் நல்ல தரம் மற்றும் குறைவான விலையில் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வாடிக்கையாளர்களும் அதிகளவில் ஆவின் பால் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும், கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது. மேலும், பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலை வழங்கப்படுவதால் நாளொன்றுக்கு மட்டுமே 29.50 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பொங்கல் பரிசுடன் ரூ.2000 ரொக்கம் – அரசு ஆலோசனை!
இந்நிலையில், மாட்டின் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாலின் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இவ்வாறு, பாலின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டால் பால் பாக்கெட்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.