கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் – அமைச்சர் அறிவிப்பு!

0
கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் - அமைச்சர் அறிவிப்பு!
கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் - அமைச்சர் அறிவிப்பு!
கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு எம்ஆர்பி தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

ஊக்க மதிப்பெண்:

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய நிலையில் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றி வந்தனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறந்த மதிப்பெண் வழங்கி அரசு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன. அதன்படி கொரோனா காலத்தில் சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான சலுகைகள் குறித்தான அறிவிப்பை தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 6 மாவட்டத்தில் 100 டிகிரியை தொட்ட வெயில் – வானிலை மையம் தகவல்!

அதாவது, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு இரண்டு ஆண்டுகள் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் தகுதித் தேர்வில் ஐந்து மதிப்பெண் ஊக்க மதிப்பெண்ணாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!