தமிழகத்தில் 6 மாவட்டத்தில் 100 டிகிரியை தொட்ட வெயில் – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் தாக்கம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் உச்சத்தில் இருந்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று (ஆகஸ்ட் 1) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 2) அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அது மட்டுமில்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நேற்று பதிவான வெப்ப அளவின் படி, மதுரை விமான நிலையத்தில் 103.64 டிகிரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் 103.28 டிகிரியும், மதுரை நகரத்தில் 102.56 டிகிரியும், பரமத்தி வேலூர் பகுதியில் 101.3 டிகிரியும், ஈரோடு மாவட்டத்தில் 101.12 டிகிரியும், கடலூர் மாவட்டத்தில் 100.76 டிகிரியும் பதிவாகி இருக்கிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – மாதம் ரூ.1000 பெற வேண்டுமா?
இது ஒரு பக்கம் இருக்க, மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை இலேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.