தமிழ்நாட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் முகாம்கள்…!! அரசு வெளியிட்ட அதிரடி புள்ளி விவரம் இதோ
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு சமீபத்தில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின், பல்வேறு முக்கிய மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, தற்போது புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டு சென்னையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இன்று வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு” ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், “இந்த குழுவின் வழிகாட்டுதலுடன், அலுவலர்கள் மேற்கொண்ட பணியால், இதுவரை தமிழ்நாட்டில் 1,36,149 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும்” தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


























