
இனி குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்…!! பட்ஜெட்டில் வெளியான சிறப்பு அறிவிப்பு..!!
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025 -2026 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழக குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, “தமிழ்நாட்டில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித் தொகை அவர்களின் 18 வயது வரை வழங்க உள்ளதாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Budjet 2025- 26 : பள்ளி மாணவர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்புகள்..!! 1 கோடி பரிசுத்தொகையுடன் கூடிய புதிய ஒலிம்பியாட் போட்டி அறிவிப்பு
மேலும், “கருப்பை வாய் புற்றுநோயை தவிர்க்க 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி வழங்க ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு” செய்யப்பட்டுள்ளது. மேலும், “தமிழ்நாடு முழுவதும் ரூ. 83 கோடி நிதி ஒதுக்கீட்டில் குழந்தை மையங்கள் அமைக்க உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, “பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீட்டில் முக அடையாளம் காணும் கேமராக்கள் பொருத்தப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

























