தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், இன்று தென் மாவட்டங்களில் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலை போன்ற வானிலையே நிலவக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
























