SSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2 மூலம் நியமனம் செய்யப்பட உள்ள SSC தேர்வர்களுக்கு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SSC வாரியம்:
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2 2022ன் மூலம் இந்திய தணிக்கை & கணக்குத் துறையில் (இந்தியாவின் கட்டுப்பாட்டாளர் & ஆடிட்டர் ஜெனரலின் கீழ் உள்ள அலுவலகங்கள்) உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய தகவல்கள் ஒன்றை வாரியம் வெளியிட்டுள்ளது.
அதாவது, இப்பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாநிலங்கள் / அலுவலகங்கள் ஒதுக்கீடு ஆனது, வேட்பாளர்களின் தகுதி மற்றும் மாநில விருப்பத்தின் அடிப்படையில் தான் செய்யப்படும். இது குறித்த மேலும் அதிக தகவல்களை இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் (www.cag.gov.in) என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.