சிறு சேமிப்பில் முதலீடு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இது கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!
மக்கள் பலர் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டங்களில் இனி முதலீடு செய்தால் வருமான சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கட்டாயம்
நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை பலர் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய சில விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் படி சிறு சேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் வருமான சான்று கட்டாயமாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை – வானிலை எச்சரிக்கை!
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களிடம் வருமான சான்றை தபால் அலுவலக ஊழியர்கள் வாங்க வேண்டும் என இந்திய தபால் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தீவிரவாதம், பண மோசடி போன்றவற்றுக்கு சிறு சேமிப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தாமல் இருக்க KYC விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக அமல்படுத்தி இருக்கிறது.
மேலும் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் அவர்களின் ரிஸ்க் அடிப்படையில் குறைந்த ரிஸ்க், நடுத்தர ரிஸ்க், அதிக ரிஸ்க் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் குறைந்த ரிஸ்க் முதலீட்டாளர்கள் 50,000 ரூபாய் வரை முதலீடு செய்வார்கள், நடுத்தர ரிஸ்க் முதலீட்டாளர்கள் 50,000 ரூபாய்க்கு மேல், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்வார்கள், அதிக ரிஸ்க் முதலீட்டாளர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வார்கள், அதில் அதிக ரிஸ்க் முதலீட்டார்கள் தங்கள் வருமான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது