தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து வெளியான முக்கிய தகவல் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து தற்போது நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.
இவர்களில் மொத்தம் 67,787 ( 51.3%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சியடைந்தனர். மேலும் முதல் 50 இடங்களில் 2 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவராக உள்ளனர். இந்த நீட் தேர்வுக்கு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலையில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா நடைபெற்றது.
அதிரடி முடிவினை எடுத்துள்ள ஐடி நிறுவனங்கள்- ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்!
Exams Daily Mobile App Download
இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தமிழக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்