அதிரடி முடிவினை எடுத்துள்ள ஐடி நிறுவனங்கள்- ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்!
நாட்டில் தற்போதைய பணவீக்கம் காரணமாக பல்வேறு துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஐடி துறையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஐடி நிறுவனங்கள் தற்போது ஊழியர்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
பணி நீக்க அபாயம்:
கொரோனா காலத்தில் அதிக தேவை ஏற்பட்ட காரணத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் படித்த பட்டதாரி இளைஞர்களை பணி நியமனம் செய்தனர். அப்போதைய நிலையில் நிறுவனங்களின் திறனை அதிகரிக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் ஐடி நிறுவனங்கள் அதிக லாபத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் பல லட்சக்கணக்கானவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றனர்.
ஆனால், அதன்பிறகு நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பணவீக்க விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் செலவுகளை குறைக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் முதல் கட்டமாக புதிய ஊழியர்கள் பணி நியமனம் எதுவும் சமீப காலமாக நடைபெறவில்லை.
பேஸ் புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – உங்க Password மாத்துங்க.. வெளியான ஷாக் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், அடுத்தபடியாக தற்போது தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கையில் நிறுவனங்கள் எடுத்துள்ளது. அதன்படி, ஒரு பிரபல ஐடி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்து வரும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக 20% தற்காலிக பணியாளர்கள் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக தற்காலிய ஊழியர்களை நீக்குவதற்க்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்