
மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் தகவல்..!!
கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆனது நடப்பாண்டில் முன்கூட்டியே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் மே 13 ஆம் தேதி அன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியது.
இதை தொடர்ந்து, கேரளாவில் வழியாக படிப்படியாக குமரிமுனை வரை பரவும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் “வரும் மே 22 ஆம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் தமிழகத்தில் அன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”. மேலும், பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டிய நிலையில் தற்போது கோடை காலம் வெயில் தணியும் படி தமிழகத்தில் இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழைக்கு பெய்யக்கூடும் என கணிப்புகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

























