
“இனி தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை”.. அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
திருநெல்வேலியில் நேற்று முன்தினம் சூறை காற்றுடன் பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. எனவே இப்பகுதியில் நேற்று (16-05-2025) அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்பாராத வகையில் சூறை காற்றுடன் கோடை மழை பெய்யும்போது பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. இதனால் மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலியில் பெய்த கோடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இதை தொடர்ந்து, கோடை மழையின்போது சூறைக்காற்று வீசுவதால், ஆங்காங்கே மின்தடை ஏற்படுகிறது. “இந்த காற்றாலையால் மின் உற்பத்தி அதிகளவில் கிடைப்பதால் தமிழகத்தில் இனி மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும், கோடைகால மின்தேவை கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் மின் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்”.

























