பி.டெக்., இன்ஜினியரிங் பட்டங்கள் செல்லும் – தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!!
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி வாயிலாக பி.டெக்., பொறியியல் பட்டம் மற்றும் பொறியியல் பட்டயப்படிப்பு போன்றவை வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்குவது பல்கலைக்கழக விதிமீறல் எனவே அந்த படிப்புகள் தொலைதூர கல்வி மூலம் வழங்க முடியாது என யுஜிசி தெரிவித்துள்ளது. இதனால் அந்த படிப்புகள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம்:
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் மற்றும் பொறியியல் பட்டபடிப்பிற்கான வகுப்புகள் தொலைதூரமாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை தொலைதூரம் மூலம் வழங்குவது பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பானது. எனவே இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப படிப்புகள் நிறுத்தப்பட்டன.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பொது தகவல் அலுவலர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
இந்த அறிவிப்பு தற்போது வெளியான நிலையில், ஏற்கனவே இந்த முறை மூலம் படித்துக்கொண்டிருக்கும் 2 ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2010-2011, 2011-2012 பிரிவினருக்கு அவர்களின் பி.டெக் , பி.இ பட்டங்கள் செல்லும் என விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பொது தகவல் அலுவலர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
இது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், “இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயின்ற 2010-2011, 2011-2012 மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு தனித்த விஷயமாக இருக்க வேண்டும். பிற்காலத்தில் இது முன்னுதாரமாகவோ, 2012 பிந்தைய ஆண்டுகளுக்கோ கருதக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்