5 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!

1
5 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!
5 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!
5 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளுக்கான அரசு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். தேர்தல் பணிகளுக்கான தமிழக ஆசிரியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்:

தமிழக அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் பணிக்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் உரிய கட்டுப்பாடுகள் உடன் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதே போல தமிழகத்திலும் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு – தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது !!

ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்துவது எந்த விதத்தில் மாணவர்களை சென்று அடையும் என்று தெரியாத நிலையில் அது குழந்தைகளுக்கு புட்டிபால் கொடுப்பது போன்றது என்று குறிப்பிட்டார். மேலும் புதிய ஓய்வூதிய திட்டம் மூலம் உள்ள ஊதிய குழு முரண்பாடுகளை களைய கடந்த வருடம் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!

மேலும் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது அரசு 17பி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின் இறுதியில் தமிழக முதல்வர் ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது விரைவில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று என்று கூறினார். ஆனால் எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – நிரந்தர பணியிடத்திற்கு பட்டதாரிகள் தேவை !!!

இதனால் 5,068 ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெறாமலும், பதவி உயர்வு பெறாமலும் தவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் தேர்தலில் உள்ள 234 தொகுதிகளிலும் ஆசிரியர்களின் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!