பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!

0
பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!
பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!
பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்ததும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக படிப்படியாக பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தன.

தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் பள்ளிகளை திறக்காவிடில் ஆர்ப்பாட்டம் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!!

பள்ளிகள் திறக்கப்பட்டு முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியும் கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்ப்டுத்தியது. இதனால் அந்த பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

அதில், வீடு வீடாக ஆய்வு செய்து கொரோனா தொற்று காரணமாக படிப்பை நிறுத்திய மாணவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப மாணவர்கள் உள்ளிட்டவர்களின் விபரங்களை சேகரித்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் சுமையை குறைக்க பாடத்திட்டங்களை குறைத்து, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு – முதல்வர் அறிவிப்பு!!

பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளதால், மீண்டும் திறக்கப்பட்டவுடன் தேவையான உதவிகளை மாணவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். ஆன்லைன் பாடங்கள் கற்பிக்க முடியாத இடங்களில் ரேடியோ, டிவி மூலம் வகுப்புகள் எடுக்கலாம். மேலும் மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து நடமாடும் பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து, கற்க முடியாத சிரமமான பாடங்களுக்கு விளக்கம் அளித்து அதில் அறிவை பெற உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!