பள்ளி செல்லாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்- மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்!!

0
பள்ளி செல்லாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்- மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்!!
பள்ளி செல்லாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்- மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்!!
பள்ளி செல்லாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்- மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்!!

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி செல்லாத மாணவர்களின் விவரங்களை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மீண்டும் பள்ளியில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி:

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் சில குடும்பங்களில் பெருளாதார நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் – பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு!!

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை, “கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததாலும், குடும்ப பொருளாதாரம் காரணமாகவும் பள்ளிகளில் உள்ள சில மாணவர்கள் இடைநிற்றல் அல்லது பள்ளியை தொடரமுடியாத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும். இதனால் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவர் சேர்க்கை, கற்றல் இழப்பு மற்றும் சேர்க்கை மோசமடைவதை தடுக்கலாம். எனவே இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த நிலைமை ஏற்படாத வண்ணம் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு!!

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், சமநிலையுடன் மாணவர்கள் பாடங்களை கவனிக்கவும் மாநில அரசுகள் வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாநிலங்களில் உள்ள 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மாணவர்களில் கணக்கெடுப்பு நடத்தி அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – நிரந்தர பணியிடத்திற்கு பட்டதாரிகள் தேவை !!!

இது தவிர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் காணொலி மூலமாகவோ, டிஜிட்டல் மூலமாகவோ, பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டலாம், கல்வி இழப்புகளை குறைக்கலாம். மேலும் தொலைக்காட்சி பெட்டி, வானொலி, சீருடை வழங்குவது, புத்தகங்கள் வழங்குவது, மதிய உணவு திட்டங்களை ஊக்குவித்து மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க வேண்டும்” இவ்வாறு மத்திய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!