
“மக்களே…! உங்க பேங்க் புக்கில் பேலன்ஸ் இல்லாவிட்டாலும் PMJDY மூலம் ரூ.10,000 எடுக்கலாமா…?? ” அட, இது தெரியாம போச்சே..!! ‘சூப்பர் சான்ஸ் …!!
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்பது இந்திய அரசாங்கத்தால் ஆகஸ்ட் 2014 ல் தொடங்கப்பட்ட நாடு தழுவிய திட்டமாகும். மேலும் இத்திட்டம் அடிப்படையான சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, மலிவு விலையில் ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வது போன்ற நோக்கங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளர்களுக்கு விபத்து காப்பீடு, ஓவர் டிராப்ட் மற்றும் நிதி உதவி வசதி அளிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டமானது சந்தாதாரர்களுக்கு இலவசமாக RuPay டெபிட் கார்டு வழங்குகிறது. அதேபோல் வங்கி கணக்கில் குறைந்தபட்ச பணம் இருப்பு தேவையில்லை என்பது இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில், ஜன் தன் யோஜனா திட்டம் ஆனது 2 லட்சம் வரை விபத்து காப்பீட்டை உள்ளடக்கி உள்ளது. அதேபோல் பயனாளர்கள் விபத்து காப்பீட்டு நிதியை பெறுவதற்கு ரூபே கார்டு மூலம் நிதி அல்லது நிதி அல்லாத பரிவர்த்தனைகளை 90 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். மேலும் ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம், இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் அல்லது பிஓஎஸ் டெர்மினல் போன்ற எந்த ஒரு சேனலிலும் இந்தப் பரிவர்த்தனையைச் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ், அடிப்படை சேமிப்புக் கணக்கை PMJDY உள்ள வங்கிக் கிளையிலும் அல்லது பேங்க் மித்ராவிலும் , வேறு வங்கிகளில் கணக்கு இல்லாத நபர்களும் தொடங்கலாம்.

























