PF தொகையை பாதியிலேயே பெறுவது எப்படி? முழு விளக்கங்களுடன்!
ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் PF தொகையை பாதியிலேயே பெறுவது எப்படி என்பது குறித்த முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PF தொகை:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரைக்கும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பின்னர், ஊழியரின் மருத்துவ அவசரநிலை, சொத்து வாங்குதல் மற்றும் கல்வி ஆகியவற்றிற்காக EPF தொகையை பாதியிலேயே பெற்று கொள்ளலாம். அதாவது, ஒரு சில நேரங்களில் வேலையை விட்டு வெளியேற நேர்ந்தால் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை பெறலாம்.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் உயர்வு? அரசுக்கு வந்துள்ள முக்கிய கோரிக்கை!
அதாவது சேமித்த பணத்தில் 75 சதவிகிதம் வரை மட்டுமே எடுக்க முடியும். இதன் பின்னர், இரண்டாவது மாதம் முடிந்த பிறகு 100% பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால், பாதியிலேயே PF தொகையை திரும்ப பெறுவதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. ஆன்லைன் மூலமாக pf தொகையை பெறுவதற்கு முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற போரட்டலுக்கு சென்று உங்களது கோரிக்கையை முறையிட்டு PF தொகையை பெறலாம். அல்லது EPFO அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அதற்கான படிவத்தை நிரப்பியும் தொகையை பெறலாம்.