9 – 12ம் வகுப்புகள் இடைநிலைக்கல்வியில் இணைப்பு – அரசின் புதிய திட்டம்!
கேரள மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளை புதிதாக ஒருங்கிணைக்கும் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.
அரசின் புதிய திட்டம்:
இந்தியாவில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வி, ஆறு முதல் எட்டு வரை இடைநிலை கல்வி, ஒன்பது முதல் 12 வரை மேல்நிலைப்பள்ளி என்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பை புதிதாக மாற்றி அமைப்பதற்கு கேரளா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது கதர் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி 9 முதல் 12 ஆம் வகுப்புகள் இடைநிலைக் கல்வியுடன் இணைக்கப்படும்.
தமிழகத்தில் ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் உயர்வு? அரசுக்கு வந்துள்ள முக்கிய கோரிக்கை!
மாநிலத்தில் தற்போது 8ம் வகுப்பு உயர்நிலை கல்வியின் ஒருங்கிணைப்பில் இருந்து வருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் பள்ளியின் செயல்பாடு மற்றும் ஆசிரியர்களின் சேவைகளை பாதிக்காத வகையில் அமல்படுத்தப்பட உள்ளன. இனிவரும் காலங்களில் இந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் இரண்டாம் நிலை ஆசிரியர்கள் என்று தனி பிரிவாக மாற்றப்படும். இதற்காக ஆசிரியர் பயிற்சி மற்றும் படிப்புகளில் சீர்திருத்தங்களை அரசு அமல்படுத்த உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.