இலவச சிலிண்டர் வேணுமா..? மத்திய அரசு கொண்டு வந்த அசத்தலான திட்டம்..!!
நாட்டில் உள்ள இல்லத்தரசிகளின் நலனுக்காகவும், மற்றும் அவர்களின் நன்மைக்காகவும் 2016 ம் ஆண்டு உஜ்வலா யோஜனா 2.0 திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது . அந்த வகையில், தற்போது வரை இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான கிராமப்புற பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில், இலவச சிலிண்டர் வாங்க தேவையான ஆவணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
1. முதலில் www.pmuy.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று உஜ்வாலா யோஜனா 2.0 என்ற படிவத்தை பூர்த்தி செய்யவும்.
2. பிறகு, பெயர், முகவரி மற்றும் ஆதார் எண் உள்ளடக்கிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, உங்கள் அடையாள ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.



























