சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? கனமழை காரணமாக அரசு பரிந்துரை!
தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையின் காரணமாக சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு, பகல் பாராது கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுப்பது போல் சாலையோரங்களில் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கான வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவின், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்தில் உள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு!
ஆனால் தனியார் நிறுவன ஊழியர்கள் இதை இக்கட்டான சூழலிலும் பணிக்கு சென்று வருகின்றனர். எனவே தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, பணியாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டில் இருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. தற்போது கொட்டித் தீர்க்கும் கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.