உயர்நீதிமன்றங்களில் 40 சதவீத காலிப்பணியிடங்கள் – மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்!!
நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு கிடப்பில் வைத்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
நீதிபதி பணியிடங்கள்:
நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதற்கு நீதிபதிகளின் பற்றாக்குறையும் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் விரைந்து நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கூறுகையில், உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல் அந்த பணிகளை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 1,080 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. அதில் 417 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் பல வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமல், நீதி தாமதமாகிறது. மேலும் இப்பணியிடங்களை நிரப்ப 103 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றங்கள் சார்பில் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை மத்திய அரசு கிடப்பில் போட்டு உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு – முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை!!
எனவே அந்த பட்டியல் மீது கவனம் செலுத்தி தக்க காலத்திற்குள் முடிவெடுத்து, கொலிஜியம் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கூறி உள்ளனர். பல மாநில நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லாத காரணத்தால் ஏராளமான வழக்குகள் தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்