தமிழக பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு – முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை!!
தமிழக அரசின், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர கட்டாயமில்லை என ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அலுவலக பணியாளர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் கடந்த 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் பாடங்களை விரைவில் முடிக்க சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு குறைதீர்க்கும் மனுவில் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை என குறிப்பிட்டிருந்தனர்.
கோவில்பட்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயரத்தின காந்தி அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளவை, “தமிழக அரசின் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர காட்டாயப்படுத்துவதாக எங்கள் சங்கத்திற்கு புகார் வந்துள்ளது.
ஜனவரி 29 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நல அலுவலர் அறிவிப்பு!!
ஆனால், முதலமைச்சரின் குறைதீர்க்கும் மனுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், இளநிலை உதவியாளர்கள் சனிக்கிழமைகளில் பணிக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத பணியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு அறிவித்துள்ளனர். அரசு விடுமுறை நாட்களில் அவர்கள் பணிக்கு வராவிட்டால், இன்னொரு நாள் பணி செய்யலாம் என்று அறிவிப்பு விடலாம். இதன்படி விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்துவது தவறான செயல் ஆகும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்