உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிப்பு – பாராளுமன்ற குழு பரிந்துரை!!
சட்டம் மற்றும் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சார்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை 65 ஆக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான வயது வரம்பு 1998 ஆம் ஆண்டு 60 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான வயது வரம்பினை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் வயது வரம்பை 62 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் வயது வரம்பை 65 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து சட்டம் மற்றும் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, நாட்டில் உள்ள பல உயர் நீதிமன்றங்களில் பல நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை சரி செய்யும் நோக்கிலும், அவற்றை சமன் செய்வதற்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த குழு உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
தனியாருக்கும் அரசுப்பள்ளிக்கு இணையான சலுகைகள் – கோரிக்கை!!
மேலும் நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பது என்பது நீதிபதிகளில் வேலை நாட்களை கணக்கீடு செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பு 65 ஆக இருக்கும் போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டும் 62 வயதில் ஓய்வு பெறுவது சரியானதாக இல்லை. எனவே இருவரையும் சமமாக கருதும் பொருட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி 65 ஆக நிர்ணயித்து ஆணை வழங்க வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.