தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் மட்டும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் மேல் மற்றும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஏற்படும் சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது.

இனி பைக் டாக்சி சேவை கிடையாது – ரத்து செய்ய கோரி மே. 9 உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

மேலும், மழையின் காரணமாக தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி, இராமநாதபுரம், கடலூர், திருச்சி, திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது. அடுத்ததாக மே ஏழாம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டுத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரைப் பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!