பொதுமக்களுக்கு எச்சரிக்கை: தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!
தமிழகத்தில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் நாளை (நவ .05) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, தூத்துக்குடி நாகப்பட்டினம் திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,விருதுநகர், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
நவ.6ம் தேதி அன்று, விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், கடலூர், திருவாரூர், விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடிகன்னியாகுமரி,புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தேனி, , தென்காசி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல நவ.7,8 ஆகிய இரு நாட்களும் மழை நீடிக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KV பள்ளிகளில் நிரப்படவுள்ள 4000 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ
Follow our Instagram for more Latest Updates
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.