
தமிழகத்தில் இன்று(17.12.2024) இந்த மாவட்டங்களில் அள்ளி ஊற்றப்போகும் கனமழை..!! ” உங்க மாவட்டமும் இருக்கானு பாத்துக்கோங்க”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(17.12.2024) வலு வடைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
அந்த வகையில், தொடர் கனமழை எதிரொலியாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(17.12.2024) ‘ஆரஞ்சு’ அலர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று(டிசம்பர் 17) அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


























