
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பண்ண போறீங்களா?.. அப்போ இந்த புதிய மாற்றம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
முறையான முதலீட்டு திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு அணுகுமுறையாகும். மேலும், இதில் முதலீட்டாளர்கள் ஒரு நிலையான தொகையை மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒரு முறையாக முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இதை தொடர்ந்து SIP முதலீடுகள் குறித்து புதிய மாற்றம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
டிசம்பரில் நடைபெற்ற அரசு தேர்வுகள் ரத்து…!! ” காரணம் இதுதானா…TNPSC விளக்கம்”..!!
அதாவது SIP முதலீட்டாளர்கள் இனிமேல் பணம் டெபிட் செய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே தங்கள் SIP-ஐ ரத்து செய்யலாம். மேலும், SIP-ஐ ரத்து செய்யக் கோரும் போது, 2 நாட்களுக்குள் முதலீட்டாளரின் கோரிக்கையை ரத்து செய்வது குறித்து சொத்து மேலாண்மை நிறுவனம் (AMC) பதிலளிக்க வேண்டும். அவ்வாறு SIP தொகை கழிக்கப்படவில்லை என்றால், AMC பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர் (RTA) முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், பயனாளருக்கு திட்டத்தின் செயல்திறன் மற்றும் சேவை தொடர்பான ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் முறையாக புகார் அளிக்கலாம் என இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் (AMFI) தெரிவித்துள்ளது.


























