மீண்டும் 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு – பொதுமக்களே உஷார்!!
அரபிக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த கனமழை டிசம்பர் 16 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் – மத்திய அரசின் திட்டம் என்ன?
சென்னையை பொறுத்த வரையிலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் எந்தவித புயல் சின்னமும் உருவாகாத நிலையில் மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.