ரேஷன் கடைகளில் ரூ 1000 நிவாரண தொகை – சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் இன்று தொடக்கம்!
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
கனமழை நிவாரணம் :
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விடாமல் பெய்த மழையால் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களின் துயர் போக்க மாநில அரசும் அவ்வவ்போது நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆண்டு மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு தமிழக அரசின் மூலம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா பல்கலையில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு – மீண்டும் வாய்ப்பு!!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் இன்று நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள 1,61,647 குடும்ப அட்டை தாரர்களுக்கு 238 ரேஷன் கடைகள் மூலம் ரூ 1000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.