
தமிழகத்தில் இன்று(21.01.2025) சூறாவளி வீசப்போகும் பகுதி எது தெரியுமா..? தெரியாதவங்க உடனே பாருங்க..உஷாரா இருங்க”..1
மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, நேற்று(20.01.2025) முதல் தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், காலை நேரத்தில் பனிமூட்டமும் மற்றும் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பொழிய அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், இன்று(21/01/2025) முதல் அடுத்த 1 வாரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
























