தமிழக மக்களுக்கு தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் – முக்கிய தகவல்!

0
தமிழக மக்களுக்கு தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் - முக்கிய தகவல்!
தமிழக மக்களுக்கு தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் - முக்கிய தகவல்!
தமிழக மக்களுக்கு தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் – முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால் சுகாதாரத்துறை கண்டிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தி வருகிறது. மேலும், உரிய காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வருகிறது. இதேபோல், வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம். சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

பெரும்பாலும் கொரோனா தொற்று சமூக இடைவெளியை கடைப்பிடிகாமலும் மற்றும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதால் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிமையாக பரவுகிறது. இதனையடுத்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வாய் மற்றும் மூக்கை சரியாக மூடும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடித்தாலே ஓரளவிற்கு கொரோனா தொற்றை குறைக்கலாம்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த போது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் அதிகரிக்க அதிகரிக்க முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூபாய் 500 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டுமே ரூ. 76,00,87,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கொரோனா பரவுவதை கருத்தில்கொண்டு கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தாலும் கூட உடனடியாக பரிசோதனை செய்து பரிசோதனை முடிவை தெரிந்து கொண்டு தங்களைத் தானே தனிமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடைய நபர்கள் உரிய காலத்திற்குள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!