HDFC வங்கியின் புதிய அதிரடி திட்டம்..!! “சுமையை குறைக்க கடனை கைமாற்றும் பணியில் தீவிரம்”..!!
இந்தியாவின் பிரபல தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக HDFC திகழ்கிறது. மேலும், இதில் 1,20,000-க்கும் மேல் ஊழியர்கள் பணியாற்றி வருவதால், இது இந்தியாவின் 13வது பெரிய நிறுவனமாகவும் மற்றும் சந்தை மூலதன அடிப்படையில் இந்திய பங்கு சந்தையின் 3வது மிகப்பெரிய நிறுவனமாகவும் உள்ளது. அந்த வகையில், தற்போது HDFC வங்கியானது ரூ.8,400 கோடி மதிப்பிலான கடனை கைமாற்றும் விதமாக புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. அதாவது, டெபாசிட்டை விட கடனாக வழங்கிய தொகையின் சதவிகிதமானது அதிகரித்ததால், அந்த சுமையை குறைக்கும் நோக்கில் சர்வதேச வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக HDFC வங்கி தெரிவித்துள்ளது.
இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா..!! “நிர்மலா சீதாராமன் பங்கேற்பு”..!!



























