மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே நேரத்தில் இரட்டை ஜாக்பாட்!
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு நாட்டில் பணவீக்கம் உயர்வதை பொறுத்து ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள்ளும், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் டிசம்பர் மாதத்திற்குள்ளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம், மத்திய அரசு பதவி உயர்வு வழங்க போவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய செயலக அலுவல் மொழி சேவை குழு கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரான ஜிதேந்திர சிங்கை சந்தித்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்குவது தொடர்பான நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 14) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
Exams Daily Mobile App Download
கூடிய விரைவிலேயே ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரைக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் மத்திய இணை அமைச்சர் அறிவித்துள்ளார். இப்படி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவதன் மூலமாக பதவி உயர்வு வழங்குவதில் ஏற்படும் பிரச்னைகள் நீக்கப்படும் எனவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.