தமிழகத்தில் நாளை அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரையாண்டு தேர்வுகள்:
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுகள் 11 மற்றும் 12-ம் ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக முன்னதாக பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஒரே வினாத்தாள் முறை செயல்படுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளின் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து மாணவர்களின் பாட புத்தகங்கள் சேதமடைந்து உள்ள நிலை காணப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கீடு – பணி தீவிரம்!!
முன்னதாக 7ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதியான திங்கட்கிழமை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பான ஆலோசனையில் இன்று முக்கிய கல்வி அதிகாரிகளுடன் ஈடுபட்டார். அப்போது கன மழையினால் மாணவர்களின் பாட புத்தகங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் நாளை தேர்வுக்கு தயாராக மாணவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட கால அட்டவணை விரைவில் பள்ளி கல்வித்துறை மூலம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.