வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருள் வழங்கீடு – பணி தீவிரம்!!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருளுடன் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
நிவாரண பொருள்:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க இருப்பதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்களுக்கு ரூ. 6000 வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுபோக, பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு வந்த ஜாக்பாட் செய்தி – சம்பள உயர்வு அமல்!
அந்த வகையில், தற்போது சென்னை திருவீக நகர், ஓட்டேரி செல்லப்ப முதலியார் தெருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அதாவது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி, பருப்பு மற்றும் ரூ. 200 ரொக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின்னர், ரேஷன் கார்டுதாரருக்கு ரூ. 6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.