மிக்ஜாம் புயலால் அரையாண்டுத்தேர்வில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் மிக்ஜாம் புயலின் பாதிப்பால் அனைத்து மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும் அறையாண்டுத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரையாண்டுத்தேர்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு நாளை துவங்குகிறது. அதே போல, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு 11ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதிலும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகளவில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதனால், அரையாண்டுத்தேர்வுக்கு சரியாக தயாராக முடியவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முதலில் அரையாண்டுத் தேர்வில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டுத்தேர்வில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.7 மற்றும் 8 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.14, 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தேர்வுகள் அனைத்தும் ஏற்கனவே அறிவித்த தேதியில் நடைபெறும்.