இந்திய விமானப்படையில் பணியாற்ற பெண்களுக்கான அருமையான வாய்ப்பு – வெளியான சூப்பர் தகவல்!
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்வதற்கு மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் பெண்களை இணைப்பது குறித்து விமானப்படை தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.
அக்னிபத்
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 90-வது இந்திய விமானப்படை தினமானது சண்டிகரின் சுக்னா ஏரி பகுதியில் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும், விமானப்படை விமானங்களின் சாகசமும் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி கூறியிருப்பதாவது, அக்னிபத் திட்டத்தின் வாயிலாக இந்திய விமானப்படையில் வீரர்களை இணைக்கும் பணியானது மிகவும் சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் மூலமாக இளைஞர்களின் திறனை பயன்படுத்தி கொள்ளவும் முடிகிறது என கூறினார்.
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்? அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து விமானப்படையில் நியமிக்கப்படும் அக்னிவீரர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 3000 வீரர்கள் பயிற்சியில் இணைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அக்னிபாத் திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் பெண்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் இதற்கான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்