தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்? அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்? அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்? அமைச்சர் விளக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை விழாவில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து பேசியுள்ளார்.

தொழிற்கல்வி பாடம்:

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை ஏராளமான மாணவர்கள் தேர்தெடுத்து பயின்று வருகின்றனர். இந்நிலையில் திடீரென 2022 – 2023-ம் கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது தொழிற்கல்வி கற்பிக்க புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. அத்துடன் ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

அதே நேரம் தொழிற்கல்வி பாடத்தை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. அதனால் தொழிற்கல்வி பாட பிரிவை மூடுவதாக தெரிவித்தனர். மேலும் நடப்பு ஆண்டில் இந்த பாடப்பிரிவை தேர்தெடுத்த மாணவர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குடும்ப மாணவர்கள் படிக்கும் படிப்புகளை அரசு நிறுத்துவது முறையானது அல்ல என்று கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.

3 முதல் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – இனி தேர்வு முறையில் மாற்றம்!

Exams Daily Mobile App Download

மேலும் முதல்வர் அறிமுகம் செய்துள்ள நான் முதல்வர் திட்டம் தொழில்கல்வியின் பயனை உணர்த்துகிறது. இந்த நேரத்தில் தொழிற்கல்வியை ரத்து செய்வது நியாயமற்றது என்றும் கூறினர். சில பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் குறைவான எண்ணிக்கையில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வெளியான வதந்திகளுக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!