Gpay & Paytm ல் பணம் செலுத்த அனைவருக்கும் இனி கட்டணம் – வாங்க தெரிஞ்சுக்கலாம்!
ஏப்ரல் மாதம் முதல் UPI மூலம் பணம் செலுத்தும் அனைவருக்கும் கட்டணம் என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மை நிலவரத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க மக்களே.
கட்டணம்:
நேரடி பணப்பரிமாற்றம் என்பது மிகவும் குறைந்து, கடந்த சில வருடங்களாக அனைத்து தரப்பு மக்களும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். இதனால் பேப்பர் பயன்பாடு குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூலையில் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.. சூத்திரத்தில் மாற்றம்!
Follow our Instagram for more Latest Updates
மேலும், இதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று அரசு உத்தரவாதமும் அளித்திருந்தது. ஆனால் திடீரென்று ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் UPI பரிமாற்றத்தின் போது இனி ரூ.2,000 க்கு மேல் செலுத்தும் போது 1.1 % கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், பெட்டி கடை முதல் அனைத்து வித வணிகத்திற்கும் இப்போது UPI மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், தேவைக்கு அதிகமாக கையில் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல நன்மைகள் இதில் உள்ளது.
ஆனால், புதிய கட்டணம் விதிப்பு என்பது மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், Gpay & Paytm போன்ற செயலிகளின் wallet மூலம் ரூ.2,000 க்கும் அதிகமாக பணம் செலுத்தும் போது, அந்த வணிக நிறுவனர் தான் அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். மக்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல், எப்போதும் போல் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்பது தான் இந்த அறிவிப்பின் உண்மை நிலவரமாக உள்ளது.