குடித்துவிட்டு பாக்கியா வீட்டிற்கு செல்லும் கோபி.. கோவத்தின் உச்சியில் ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இந்த வாரம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி குடித்துவிட்டு வந்ததால் ராதிகா அவரை விட்டு செல்ல முடிவு செய்கிறார். ஆனால் கோபி இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்ய ஆனால் அதனை மீறி கோபி குடித்துவிட்டு செழியனை பாக்கியா வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்வது எல்லாம் அடுத்த எபிசோடில் வர இருக்கிறது
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வர வர குடிக்கு அடிமையாகி இருப்பதால் ஈஸ்வரி அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார். மேலும் இனிமேல் குடிக்க மாட்டேன் என கோபி ராதிகாவிடம் சத்தியம் செய்கிறார். ராதிகாவும் கோபிக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவின் படி ஈஸ்வரி கோபியை தனியாக சந்தித்து, ராதிகாவை பிரிந்து நம்ம வீட்டிற்கு வந்துவிடு என சொல்கிறார். அதை கேட்ட ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
கோபியை நல்ல முடிவு எடுக்க சொல்ல, வீட்டிற்கு சென்ற கோபியிடம் ராதிகா பயங்கரமாக சண்டை போடுகிறார். அதனால் மன வருத்தப்பட்ட கோபி மீண்டும் பயங்கரமாக குடிக்கிறார். குடித்துவிட்டு எப்படி வீட்டிற்கு செல்வது என தெரியாமல் இருக்க, அவர் செழியனுக்கு போன் செய்கிறார். செழியனிடம் சொல்லி ராதிகா வீட்டிற்கு வேண்டாம் என்னை பாக்கியா வீட்டிற்கு அழைத்து செல் என சொல்ல, செழியனும் அழைத்து செல்கிறார். இந்த விஷயம் தெரிந்து ராதிகா என்ன செய்வார் என்பது எல்லாம் அடுத்தகட்ட கதைக்களமாக இருக்க போகிறது.