மாநில அரசுப் பணியாளர் தேர்வுகள் இடைநிறுத்தம் – வினாத்தாள் கசிவு விவகாரம்!
இமாசல பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசு பணியாளர் தேர்வுகள் வினாத்தாள் கசிவு காரணமாக அரசால் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் தங்கள் அலுவலக மற்றும் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு முறையான தேர்வுகள் மூலம் பணியாளர்களை நியமனம் செய்கிறது. மேலும், ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் முன்னர் நடந்துள்ளது கண்டறியப்பட்டு, மிகவும் நேர்மையான முறையில் தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜூனியர் அலுவலக உதவியாளர் (தகவல் தொழில்நுட்பம்) (JOA-IT) பணிக்கு ஹிமாச்சலப் பிரதேச பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் டிசம்பர் 25ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இத்தேர்வின் வினாத்தாள் முறைகேடாக வெளியானது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், எச்பிஎஸ்எஸ்சி தேர்வுகளை மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இடை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார்.