
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை உத்தரவு நீட்டிப்பு…!! மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிரடி தகவல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பணியாளர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், அடுத்தகட்ட போராட்டத்தை வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி நடத்த உள்ளதாகவும், ஒரு வாரம் அரசுக்கு கால அவகாசம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஞாயிற்று கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு…!! ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்
இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று அரசு வெளியிட்ட உத்தரவானது, இன்னும் 4 வாரங்களுக்கு நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே அரசு வெளியிட்ட உத்தரவில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

























